தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக வகுப்புகள் நடத்தப்படாததால் ஒன்று முதல் 11 வகுப்பு வரையிலான வகுப்பினருக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாவிட்டாலும் அவர்களின் திறனை அறிந்து கொள்வதற்காக திறனறி தேர்வு நடத்தப்படுவதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.