. -->

Now Online

FLASH NEWS


Wednesday 7 April 2021

மகாராஷ்டிரத்தில் அதிகரிக்கும் கொரோனா... 9ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு



மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் ஒன்பதாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.