. -->

Now Online

FLASH NEWS


Thursday 15 April 2021

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கையை மீறிச் செல்லவில்லை..! -சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்


தமிழ்நாட்டில், கொரோனா 2ஆவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய நிலையில், அவ்வாறு எதுவும் இல்லை என, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக, நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை சந்தித்து, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இராதாகிருஷ்ணன், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.