. -->

Now Online

FLASH NEWS


Monday 14 June 2021

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய ஆணையர் உத்தரவு

தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள
தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வருகை புரியவும்
அவர்கள் தேவையான போக்குவரத்து வசதிகளை நடைமுறைப்படுத்தவும்... 
மற்றும் தேர்ச்சி விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரைகளை வழங்கி 

பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்



தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஒரு சுற்றிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ‘‘அனைத்து வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும்.
கொரோனா தொற்று குறைந்த பிறகு, 11 மாவட்டங்களில் மாணவ்கள் சேர்க்கை நடைபெறும். ஆசிரியர்கள் பள்ளிகளுக்க வருவதற்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் சேர்க்கை விவரம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.