பள்ளிகள் மதிப்பெண் கணக்கிடும் பணியை ஜூலை 22ம்தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. தற்போது இந்த அவகாசத்தை ஜூலை 25ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
பக்ரீத் விடுமுறை தினமான இன்றும் அதிகாரிகள் பணி செய்தனர். இதன்மூலம், திட்டமிட்டபடி தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட முடியும்.
மதிப்பெண்களை இறுதி செய்வதில், பள்ளிகளுக்கு உதவுவதற்காக, தலைமையகத்தின் தேர்வு பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு, திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காக மீண்டும் விருப்பத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை அறிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.