4ம் கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு ஒத்திவைப்பு வைககப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: 4-ம் கட்ட ஜே.இ.இ., மெயின்தேர்வை 7.32 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு ஆக., 24 ம் தேதி முதல் செப்., 2 ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதற்காக ஜூலை 20 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் 3 ம் கட்ட தேர்விற்கும் 4 ம் கட்ட தேர்விற்கும் இடயே போதிய கால இடைவெளி தேவை என தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.