மேற்சொன்ன தேதிகளில் விண்ணப்பிக்க தவறுபவர்கள் சிறப்பு அனுமதி (தட்கல்) முறையில் வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும் கூடுதலாக மேல்நிலை பொதுத்தேர்வுக்கு ரூ.1,000-ம், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.