t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.03.22 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 March 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.03.22


திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: இகல்

குறள் : 851

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

பொருள்:
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்
பழமொழி :
After a dinner sit a while. 

உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

ஏமாற்றம் தோல்வியின் முதல் படியில்லை அது வெற்றியின் அத்திவாரம்.”_____கார்ல் மார்க்ஸ்


பொது அறிவு :

1.உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம் எது? 

நீலத்திமிங்கலம். 

2. கார்கள் அதிகம் உள்ள நாடு எது? 

நியூயார்க்.

English words & meanings :


Miniature - very small of it's kind, ஒரு பொருளின் சிறிய வடிவம், 

sharpen - make a thing sharp, கூர்மையாக்குதல்

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூவை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைப்பூ ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும். வாழைப்பூவில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரச்சத்து, முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
கணினி யுகம் :

Alt + F4 - Close current open program.

 Ctrl + F4 - Close window in program

நீதிக்கதை

இரண்டு அணில்கள்

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.

அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.

இன்றைய செய்திகள்

23.03.22

❗மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

❗கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 ❗மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி பிளஸ் 2 மார்க் மட்டும் போதாது; நுழைவுத் தேர்வு அவசியம்: யுஜிசி தகவல்.

❗சீனாவில் ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு நேற்று திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

❗பெண்கள் உலக கோப்பை; 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

❗நட்புறவு கால்பந்து போட்டி: இந்திய அணி முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதல்.

Today's Headlines

❗ The Tamil Nadu Legislative Assembly passed a unanimous resolution condemning the Karnataka government for allocating funds to build a new dam at Meghathattu.

 ❗ The Chief Minister laid the foundation stone for a multi-purpose specialty hospital to be built at a cost of Rs 230 crore at the Guindy King Institute campus.

❗ Plus 2 marks alone are no longer enough to enroll in central universities; Entrance Exam Requur: UGC Information.

 ❗ The city of Shenyang in China was hit hard by a sudden lockdown there yesterday. The entire industrial city of Shenyang, home to about 90 million people, is sealed off.

 ❗ Women's World Cup; India won by 110 runs.

❗ Friendly football match: Indian team clashes with Bahrain and Belarus respectively.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

JOIN KALVICHUDAR CHANNEL