t> கல்விச்சுடர் நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 April 2022

நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படுமா? கல்வி அமைச்சர் பதில்

பொதுத்தேர்வு, பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2-வது நாளாக நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ‘பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில பாடத்திட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நடத்தி முடிக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் எழுந்துள்ளது’ என்று நிருபர்கள் கேட்டனர்.

 அதற்கு, ‘எந்த பாடத்திட்டங்களை நடத்தி முடிக்கவில்லையோ அதில் இருந்து வினாக்கள் கேட்கக்கூடாது என்பதுதான் நியாயமானது. கண்டிப்பாக அதை கவனத்தில் கொள்வோம்' என்றார்.

JOIN KALVICHUDAR CHANNEL