t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2022 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 June 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2022


திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: மானம்
குறள் : 968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

பொருள்:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்

பழமொழி :
Clouds that the sun builds up darken him.


வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினை ஆனது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.

 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.

பொன்மொழி :

கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்... கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை!

பொது அறிவு :

1.கங்காரு ஒரே குதிப்பில் எத்தனை தூரம் செல்லும்?

 9மீட்டர்.

 2. மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு எது? 

 ஆமை.

நீதிக்கதை

பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். 

அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான். 

அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கணவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான். 

கணவான், எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது, என்னப்பா? என்று கேட்டார். 

கோட் சூட் வாலிபன் சொன்னான், நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5 ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். 

எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன். 

அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். 

என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா, என்றான்.

இன்றைய செய்திகள்

27 .06.22

★சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

★தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.

★அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.

★பூச்சிகளை பிடித்து உண்ணும் அரிய வகை தாவர இனம் மேற்கு இமயமலைப் பகுதியில் கண்டுபிடிப்பு.

★ரஷிய பொருட்களின் போக்குவரத்துக்கு தடை; எந்த சலுகையும் வழங்க முடியாது – லிதுவேனியா அறிவிப்பு.

 ★அரசுப்பள்ளிகளில் செஸ் போட்டிகள் ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடத்த வேண்டும்; வெற்றிபெறும் மாணவர்கள், மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்ப்பதற்கும், செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்; பள்ளிக்கல்வித்துறை.

★உலக கோப்பை வில்வித்தை: இந்திய ஜோடி தங்கம் வென்று சாதனை.

★காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய நீச்சல் அணி அறிவிப்பு.

★ரஞ்சி கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது மத்திய பிரதேச அணி.

★பெண்கள் கிரிக்கெட்; இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி.

Today's Headlines

🌸In Chennai to supervise and manage the monsoon rain and its impacts 15 IAS officers were appointed.

🌸 There is a chance for rain for 4 days on the coming days - prediction by Metrology Department

🌸Students who studied in government school till 12th then going for the Higher studies will get the stipend of 1000 rs. The registration process through website is started.

🌸 The special and rare carnivorous plants which eat insects are discovered in West Himalayas. 

🌸The country Lithuania declared that the transport of Russian goods will be stopped. There won't be any privileges.

🌸In government school the chess competition among students should be conducted between July 11th and August 5. The winners will be awarded with a tour to Mamallapuram where the Olympiatic chess tournaments are going on and will be allowed to play with the chess players there - Education Department . 

🌸In World level Archery competition Indian Pair won the gold medal. 

🌸Women's cricket against Sri Lanka Indian team won again for the 2nd time
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

JOIN KALVICHUDAR CHANNEL