காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால், இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை மையம் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .
சிவகங்கையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம்போல் காட்சியளிப்பதால், விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.