. -->

Now Online

FLASH NEWS


Friday 12 April 2024

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சம்! நகை வாங்குவோர் கலக்கம்..!!



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்பனையாகிறது.


வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சம்!..:

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை..
வரலாற்றில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரன் ரூ.54,000ஐ தாண்டியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15 நாட்களாகவே புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தொட்டது. 29ம் தேதி சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது. கடந்த 3ம் தேதி சவரன் ரூ.52 ஆயிரத்தை தொட்டது.

அதன் பிறகும் தங்கம் விலை ரூ.300, ரூ.400, ரூ.500 என்று தினசரி உயர்ந்து வந்தது.இதற்கிடையில் 4ம் தேதி சவரன் ரூ.52,360க்கு விற்றது.

6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920க்கும் விற்கப்பட்டது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,725 ஆகவும், சவரன் ரூ.53,800 ஆகவும் இருந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.

 அதன்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6805க்கும் சவரன் ரூ.54,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

 சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் மட்டுமே தங்கம் விலை 9.3 விழுக்காடு அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.  2020ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகபட்ச ஒரு மாத விலை உயர்வு சதவிகிதம் இதுவாகும்.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது, சீன அரசு தங்கத்தை ரகசியமாக வாங்கி குவித்து வருவது, சீன இளைஞர்கள் மத்தியில் தங்கத்தின் மோகம் அதிகரித்து வருவது உள்ளிட்டவை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர வைத்து கொண்டுள்ளது.


 தொடர்ந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. இப்படியே போனால் ஓரிரு நாளில் சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நிலவி வருகிறது.