t> கல்விச்சுடர் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

12 April 2025

2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை


சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் தமிழக அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்க,முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படுவது, நடைமுறையில் உள்ளது. நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலை வாசி உயர்வு அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது.

மத்திய அரசுஊழியர்களுக்கான அகவிலைப்படி, கடந்த ஜனவரி மாதம் உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால், மார்ச் மாதம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏப்., 1 முதல் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டதுபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம்அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க, முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி உள்ளார்.



JOIN KALVICHUDAR CHANNEL