சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு, இந்த வருடம் பொங்கல் போனஸாக, ரூ.3000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி, இந்த வருடம் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 3 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும், பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.