கையேந்தி நிற்கின்றோம் இறைவா................
மெய்யேந்தும் உயிர்காப்பாய் இறைவா.................
(கையேந்தி)
நீதந்த புவியில்
ஆனந்தம்கொண்டு
வாழ்ந்துவந்த வேளையிலே............
நோய்வந்து எங்கள்
உயிர்கொண்டு செல்ல வேடிக்கைப்
பார்க்கிறாயோ இறைவா...................
கண்ணுக்குத் தெரியாத உயிரொன்று பெருகி
மண்ணுக்குள்
வேராக
மனிதருக்குள்
இறங்கி
நடத்துகின்ற
நாடகம்
நீஅறியாததா?
அதைத் தடுக்க
உன்னால்
முடியாததா?
(கையேந்தி)
வாவாவா வாவாவா இறைவா
உலகைக் காத்திடவே விரைந்து
வாவாவா வாவாவா இறைவா!
சோலைவனம் அழைக்கிறது இறைவா!
பாலைவனம் ஆக்காதே இறைவா!
(கையேந்தி)
த.ஹேமாவதி
கோளூர்