t> கல்விச்சுடர் கல்விச்சுடர்: TNPSC NEWS . -->

Now Online


Recent Posts Widget
Showing posts with label TNPSC NEWS. Show all posts
Showing posts with label TNPSC NEWS. Show all posts

6 August 2021

TNPSC - 04-08-2021 திருத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் 200 PAGES PDF FILE




TNPSC - 04-08-2021 திருத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் 200 PAGES PDF FILE 
Click Here

30 June 2021

என்னென்ன அரசுப்பணி தேர்வுகள் உள்ளன என்பன பற்றிய முழுமையான விபரங்கள்- pdf

என்னென்ன அரசுப்பணி தேர்வுகள் உள்ளன என்பன பற்றிய முழுமையான விபரங்கள்- pdf CLICK HERE TO DOWNLOAD

10 April 2021

டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு ஏப்ரல், 17, 18 தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகலிலும் 19-ஆம் தேதி முற்பகலில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்வுக் கூட இணையதளமான மற்றும் ல் பதிவற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவேற்றம் மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கு வருவோருக்கான முக்கியத் தகவல்கள்..
1. தேர்வர்கள் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் எந்த தேர்வரும் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3.தேர்வுக் கூடம் அமைந்திருக்கும் இடத்தை அறிய நுழைவுச் சீட்டில் விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.
4. தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி கொண்டு வர அனுமதியில்லை என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா. சுதன் தெரிவித்துள்ளார்.
 

9 February 2021

ஜன.3-ம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது

ஜன.3-ம் தேதி நடைபெற்ற  குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகளை  வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
TNPSC- GROUP-I Preliminary Results Released

17 January 2021

பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் - TNPSC



பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஜனவரி 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 2,56,000 க்கும் மேற்பட்டோர் குரூப் 1 தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தனா்.

தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே தேர்வர்களுக்கு இழப்பீடு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்- 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது; தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

7 January 2021

குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி வெளியீடு

கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

CLICK HERE TO VIEW TENTATIVE KEY ANSWER

3 January 2021

இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றிய கேள்வி ...

TNPSC

*தந்தை பெரியார்,

 *திராவிட இயக்கம்,

 *அறிஞர் அண்ணா,

 *நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் வேள்பாரி,

*பரியேறும் பெருமாள் திரைப்படம்

குறித்த கேள்விகள் இன்று நடந்த குரூப் 1 தேர்வில் கேள்விகளாக இடம்பெற்றன.

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றிய கேள்வி இடம்பெற்றுள்ளது.



2 January 2021

GROUP 1 PRELIMINARY EXAM - 66 பணியிடங்களுக்கு நாளை தேர்வு.






*நாளை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2,57,237 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


*சென்னையில் 150 மையங்களில் 46,965 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


*3-ம் பாலினத்தவர்கள் 11 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.



31 December 2020

தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகள் என்ன? - டி.என்.பி.எஸ்.சி. வெளியீடு


தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுரைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

10 November 2018

நாளை குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை எவை?- டிஎன்பிஎஸ்சி விளக்கம்


தமிழகம் முழுவதும் நாளை குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் எழுதும் இந்தத் தேர்வில் எதைச் செய்யலாம், எதை செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதல்கள் தேர்வாணையத்தால் அளிக்கப்பட்டுள்ளன.




தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிக்கையை டின்பிஎஸ்சி வெளியிட்டது.





இதன்படி தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நாளை நடத்தப்படுகிறது. குரூப் 2 தேர்வை எழுத 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 254 பெண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 ஆண்களும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் அடங்குவர்.





குரூப் 2 தேர்வை தமிழில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேர் எழுதுகின்றனர். ஆங்கிலத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வுக்காக 2268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கல்விச்சுடர்





நாளை நடைபெறும் குரூப் 2 தேர்வினை எழுதச் செல்லும் தேர்வர்கள் தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.





தேர்வாணையம் வெளியிட்ட விதிமுறைகள்:





* தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதி இல்லை.கல்விச்சுடர்





* தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்குப் பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும்.





* காலை 9 மணிக்குள் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்குள் வர வேண்டும்.





* தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்கள் உள்ள தேர்வு அறையில் சென்று தான் அமர வேண்டும்.





* தேர்வு எழுத வருபவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டுமே எடுத்து வரவேண்டும்.





* கருப்பு அல்லது நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் மட்டுமே ஓ எம்ஆர் விடைத்தாளை நிரப்ப வேண்டும். பென்சிலில் எழுதக்கூடாது.கல்விச்சுடர்





* தேர்வறைக்குள் செல்போன்கள் மின்னணு சாதனப் பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.





* தேர்வு எழுதுபவர்களுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், புகைப்படம், பதிவு எண், உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று சரிபார்க்க வேண்டும்.





* தேர்வு எழுதும் முன் தங்களது வினாத்தாளில் பதிவு எண்ணை எழுத வேண்டும்.





* தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு கேள்வித்தாள் வழங்கப்படும்.





* 10 மணிக்கு மேல் கேள்வித்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.





* ஓஎம்ஆர் விடைத்தாளில் கேள்விகளுக்குரிய பதிவு எண்ணை தவறாகப் பதிவு செய்தாலும் ஓஎம்ஆர் விடைத்தாள் மாற்றித் தரப்படமாட்டாது.





* தேர்வு எழுதுபவர்கள் பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.





* தேர்வு விடைகளை அவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.





* கேள்வித்தாள்களில் அனைத்துப் பக்கங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.





* காலை 10.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் எந்த தேர்வரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.





* விடைத்தாள்களில் எதுவும் எழுதக்கூடாது. அப்படி ஏதாவது எழுதப்பட்டிருந்தால் அந்த விடைத்தாள் செல்லாததாகிவிடும்.





* ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும்.





* வினாத்தாளில் தேர்வர்கள் விடைகளை குறிக்கக் கூடாது.





* தேர்வறைக்குள் தேர்வு எழுதச் செல்லும் தேர்வர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு முடியும் முன்பு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.





* தேர்வறையில் காப்பி அடிப்பது, விதிமீறிய செயல்களில் ஈடுபடுவது, தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தகவல்: தி இந்து



4 November 2018

அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி செயலாளர்



நடப்பாண்டில் தமிழக அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் தேர்வு மூலம் அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பல துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் தேர்வு தாள், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குரூப் 2 தேர்வுகளில், தமிழில் தேர்வு தாள் தயாரிக்கும் வடிவமைப்பாளர்கள் இல்லாததால் ஒரு சில தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இணையதளம் மூலம் ஆவணங்கள் சரிபார்ப்பதை அறிமுகப்படுத்தியததால் இந்த ஆண்டு அதிகப்படியான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர்கள் வரும் 11-ஆம் தேதி தொடங்கும் குரூப் 2 தேர்வுகளை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் தேர்வு எழுதவுள்ளனர் என தெரிவித்தனர்.

மேலும், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும்.

அண்மையில் நீதிபதி பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்தும் முடிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டோரின் விவர பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

31 October 2018

குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பரில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்




*குரூப் 1 தேர்வு முடிவு டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது


*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


*தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல் நிலை தேர்வினை 2017 பிப்ரவரி 19ம்தேதி அன்று நடத்தி அதற்கான முடிவினை 2017 ஜூலை  21ம்தேதி அன்று வெளியிட்டு முதன்மை தேர்வினை 2017 அக்டோபர் 13, 14, 15ம் தேதிகளில் நடத்தியது


*இதற்கான தேர்வு முடிவுகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


*விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும், ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால் தேர்வர்கள் இதுகுறித்து  அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.


*மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை  நம்பி ஏமாற வேண்டாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


27 October 2018

குரூப்- 4: விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு

குரூப்- 4 பணிக்குச் சான்றிதழ் பதிவேற்றம் செய்த/செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலையை விண்ணப்பதாரர்கள் அறியலாம்.


18 September 2018

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி : சென்னை கலெக்டர் தகவல்




*சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு


*சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 காலியிடத்துக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (சாந்தோம்) தொடங்க உள்ளது


*எனவே, இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியிருந்தால் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வரும் 24ம் தேதி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


*மேலும்  விவரங்களுக்கு 044-24615160 என்ற சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


14 September 2018

TNPSC - தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு!




தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Architectural Assistant / Planning Assistant

காலியிடங்கள்: 13

கல்வித் தகுதி:

(i) Degree of Master of Town planning or its equivalent

(ii) Associate Membership of the Institute of Town planners of India or Institute of Architects of India

(iii) A Degree in Civil Engineering

(iv) A Degree in Architecture

(v) An A.M.I.E. (Civil) (i.e.). Associate Member of the Institute of Engineers (India)

சம்பளம்: ரூ.37,700 - 1,19,500

வயது: 30

விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10/10/2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 12/10/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 22/12/2018


11 June 2018

தூத்துக்குடியில் அரசுப் பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு​



ஜூன் 30ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்

விண்ணப்பதாரர்கள் ஜூன் 25ஆம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


23 May 2018

தூத்துக்குடியில் அரசு துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு


அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைப்பு - டி.என்.பி.எஸ்.சி


JOIN KALVICHUDAR CHANNEL