போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து. அரசு அறிவிப்பு
ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள்
அனைத்தையும் அரசு கைவிடுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019
ஜனவரியில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் வைத்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப்
பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு
நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் மாண்புமிகு அம்மாவின்
அரசு கைவிடுகிறது. அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும்,
ஆசிரியர்களும், மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும்
கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.